இராணுவ வீரர் லெப்டினன் பீ.ஏ. வாஸித்த கடலில் மூழ்கி உயிரிழப்பு.
பியத்தலாவ ஆமி முகாமில் இருந்து நேற்று பொத்துவில் பகுதிக்கு சுற்றுலாவை மேற்கொண்ட இராணுவ உறுப்பினர்களில் லெப்டினன் பீ.ஏ. வாஸித்த என்பவர் நேற்று (3) பொத்துவில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் ஊரனி விஸ்கி பொயின்ட் கடலில் நேற்று குளித்துக் கொண்டிருக்கையில் லெப்டினன் அவர்கள் கடல் அலையில் சிக்குண்டு காணாமல் போனார்.
அவரை ஏனைய துருப்பினர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு வருகின்ற பொழுதே அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடத்தில் பொத்துவில் பிரதேசத்தில் 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்- எம்.ஏ. தாஜகான்
Comments
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment